விடைபெறச் சொல்கிறாயா?


அந்த உணவுச் சாலையின் ஓர் ஒதுக்குப் புறமாய் அந்த இருக்கையில் அமர்ந்திருந்த சுருதியின் கண்களிருந்து பொல பொலவென விழுந்த ஒவ்வொரு கண்ணீர் துளிக ளிலும் அவள்
இன்றுவரை வளர்த்த கனவுகள், கற்ப னைகள், ஏக்கங்கள். எதிர்பார்ப்புக்கள். ஆசைகள் எல் லாமே சிதறி விழுந்தன. [மேலும்]

கடலைத் தேடுகின்ற நதி


இவளைப் போல பெண் மணிகளை ஊர் உலகிலே கண்டிருப்பீர்களா ?
இவளைப் பற்றி பேசும் போதெல்லாம் இப்படியே எனக்கு எண்ணத் தோன்றும்.

எனது முதல்ப் பார்வையிலே எந்த விதமான அலைகளையும் என் கவனக் குளத்திலே அவள் ஏற்ப்படுத்தவில்லை ஆனால் பின்னொரு நாளிலே இந்தக் குளத்திலேயே சுனாமியை வரவளைத்தவள் [மேலும்]

மனிதருக்கு இத்தனை முகங்களா?


அந்த அலுவலகம் வழக்கம்போல் கூட்டமாகவே இருந்தது..

ஒரு கோடி டெண்டர் கிடைத்ததில் ஏக மகிழ்ச்சியில் இருந்தார் கணபதி. அவர் உதவியாளர் ஓடி வந்து சொன்னார்.

''வாங்க சார் ..அந்த ஆபீசரை பார்த்துட்டு வந்துருவோம்..பேரு பரமசிவம்..ரொம்ப நாணயமானவர்..கை சுத்தம்..இதுக்கு நிறைய போட்டி..ஏகத்துக்கு லஞ்சம் கொடுக்க தயாரா இருந்தாங்க..இவருதான் நியாயமா இருந்து நமக்கு கொடுத்திருக்கார்..''

இருவரும் உள்ளே நுழைந்தார்கள் [மேலும்]

என் விழியில் நீ இருந்தாய்!


"என்னப்பா! டிப் டாப்பா டிரஸ் பண்ணிக் கொண்டு யாரைப் பார்க்கப் போகிறாய்? புதிதாக வந்திருக்கும் மாடல் அழகி, கோகிலாவைத் தானே?" என்று கேலிச் சிரிப்புடன், டாக்ஸியில் ஏறப் போன அசோகனை நிறுத்தினான், மோகன். திடுக்கிட்டுத் திரும்பிய அசோக் ஒரு அசட்டுப் புன்னகையை உதிர்த்து விட்டு பதில் பேசாமல், காரை நோக்கி விரைந்தான். [மேலும்]

மன்னனின் கௌரவம் சதுரங்க நடுவிலே!


திருவல்லிக்கேணியில் உள்ள பெரிய தெருவில் இருக்கும் இந்து உயர்நிலைப் பள்ளி கிட்டத்தட்ட 150 ஆண்டுகள் பழமையானது. பள்ளிக் கட்டடம், அதே செம்மண் கலர் பெயிண்டு அடிக்கப்பட்ட தோற்றத்தோடு இன்றும் மாறாமல் காட்சியளிக்கிறது! நான் படித்த காலகட்டத்தில், அப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சிலர் சேர்ந்து 'சாரதி செஸ் கிளப்' என்ற அமைப்பை நடத்தி வந்தனர்.அக்கிளப்பில் உறுப்பினராக ஆவது சற்று கடினமே! கிளப்பின் மூத்த உறுப்பினர்கள், சேர விரும்புபவரின் செஸ் அறிவை சோதித்துப் பார்த்து திருப்தி அடைந்தால் மட்டுமே அவர் உறுப்பினராக முடியும். சாரதி செஸ் கிளப் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை போட்டி நடத்தி, வெற்றி பெற்றவருக்கு பரிசுகளும் வழங்கி வந்தது. அந்த கிளப்பில் உறுப்பினர் ஆனதில் அப்போது எனக்கு ரொம்பப் பெருமை [மேலும்]

வல்லமை தாராயோ


முதன் முதலாய் ஏதோவொரு இதழில் உன் முகம் பார்த்த ஞாபகம்...

மீண்டும் உன் குரல் கேட்டதில் ஏதோ சுவாரசியம்...

நாளெல்லாம் தேடி மீண்டும் உன் முகம் பார்க்கிறேன் பழையது என்று எறிந்துவிட்ட இதழை...

அம்மாவின் குறுகுறுப்பு பார்வையை தவிர்க்க

முகம் மூடுகிறேன் உன் நிழல் தாங்கி வந்த இதழில்...

அடுத்த கணம் ஏதோ தவிப்பு... உன் முகம் காண்பது எப்போது?

என்னை நானே கிள்ளிக் கொள்கிறேன்...

பலமுறை உன் எண்களை அழுத்துவதாய் எண்ணி அழுத்தாமலே என்னில் தேய்கிறேன்...

கடைசியாய் உன்னை அழைக்கிறேன்...

மறுமுனையில் உன் குரல்...

ஆங்கிலம் கலவாத வணக்கத்தில் உறைந்துப் போகிறேன் நான்...என்னையுமறியாமல்
துவண்டுப் போய் தொலைப்பேசியும் நழுவுகிறது... [மேலும்]

யார் அந்த நிலவு


இன்றைக்கு வந்ததையும் சேர்த்து இது மூன்றாவது வாழ்த்து அட்டை. இதை அனுப்பிய அந்த மாதவி யார் என்று புரியாத புதிராகவே உள்ளது. என்னுடைய பள்ளியிலும் இந்தப் பெயரில் ஆசிரியையோ மாணவியோ கிடையாது. இது நான் வேலை செய்யும் மூன்றாவது பள்ளி. ஆனால் இந்த மூன்று பள்ளியிலும் எனக்குத் தெரிந்து இந்த பெயரில் யாரும் இருந்ததாக நினைவில்லையே...அப்படி இருக்கும் போது, எனக்குத் தலையே வெடித்துவிடும் போல் இருந்தது. காலையில் பள்ளிக்குக் கிளம்பும் போதே கவிதாவின் குறுகுறுப்பு பார்வையை தவிர்க்கவே பெரும்பாடுபட வேண்டியிருந்தது. எங்களுக்குத் திருமணமாகி ஒரு வருடம்தான் ஆகியிருந்தது. தாமதமாய் திருமணம் செய்ததால்தான் இன்னும் எங்களுக்குக் குழந்தையே பிறக்கவில்லை என்று அவள் மருகுவது புரியாமல் இல்லை ஆனால் அது பற்றியே யோசித்துக் கொண்டிருப்பது முட்டாள்தனமாய் தோன்றியது. [மேலும்]